search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுப்ரியா சுலே"

    • நடைபெறும் அரசியல் குழப்பத்துக்கு எனது சகோதரர் (அஜித்பவார்) தான் பொறுப்பு.
    • சந்தையில் விலை போகும் நாணயம் பற்றி தான் அனைவரும் பேசுவார்கள்

    தேசியவாத காங்கிரசை சேர்ந்த அஜித்பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆளும் பா.ஜனதாவில் சேர உள்ளதாக தகவல் வெளியான நிலையில், மகாராஷ்டிராவில் மீண்டும் அரசியல் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேயின் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க வழக்கின் தீர்ப்பும் விரைவில் சுப்ரீம் கோர்ட்டில் வெளியாக உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் மகாராஷ்டிராவில் அடுத்த 15 நாட்களில் அரசியல் பூகம்பம் வெடிக்கும் என்று வஞ்சித் பகுஜன் அகாடி தலைவர் பிரகாஷ் அம்பேத்கர் கூறினார்.

    இதுபற்றி தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலேயிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறுகையில், "அடுத்த 15 நாளில் 2 அரசியல் பூகம்பம் வெடிக்கும். அதில் ஒன்று டெல்லியிலும், மற்றொன்று மகாராஷ்டிராவிலும் வெடிக்கும். நடைபெறும் அரசியல் குழப்பத்துக்கு எனது சகோதரர் (அஜித்பவார்) தான் பொறுப்பு. சந்தையில் விலை போகும் நாணயம் பற்றி தான் அனைவரும் பேசுவார்கள்" என்றார்.

    40 எம்.எல்.ஏ.க்கள் அஜித்பவாருடன் செல்ல இருப்பதாக கூறப்படுவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சுப்ரியா சுலே, "எங்கள் கட்சியில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் சரத்பவார், அஜித்பவார், மாநில கட்சி தலைவர் ஜெயந்த் பாட்டீல் ஆகியோருடன் நிரந்தர தொடர்பில் உள்ளனர். நானும் எம்.எல்.ஏ.க்களுடன் பேசி வருகிறேன். கட்சியில் யாராவது அதிருப்தியில் இருந்தால் அது பற்றி உங்களுக்கு தகவல் தெரிவிக்கிறேன்" என்றார்.

    • நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் உள்ளனர்.
    • இந்த முடிவு அவர்கள் பெண்களை மதிப்பது இல்லை என்பதை காட்டுகிறது.

    மும்பை :

    மராட்டியத்தில் நேற்று மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. 18 பேர் மந்திரிகளாக பதவி ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஒரு பெண்ணுக்கு கூட மந்திரி சபையில் இடம் கொடுக்கப்படவில்லை. இதை தேசியவாத காங்கிரசை சேர்ந்த சுப்ரியா சுலே எம்.பி. விமர்சித்து உள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், "மந்திரி சபையில் ஒரு பெண்ணுக்கு கூட இடம் வழங்கப்படாதது துரதிருஷ்டமானது. நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பெண்கள் உள்ளனர். ஒரு பெண்ணுக்கு கூட மந்திரி சபையில் இடம் கிடைக்காது அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் அளிக்கிறது. இந்த முடிவு அவர்கள் பெண்களை மதிப்பது இல்லை என்பதை காட்டுகிறது" என்றார்.

    இந்த விவகாரத்தில் சுப்ரியா சுலே, அவரை சில மாதங்களுக்கு சமையல் அறைக்கு சென்று சமைக்க வேண்டும் என கூறிய பா.ஜனதா மாநில தலைவர் சந்திரகாந்த் பாட்டீலையும் மறைமுக விமர்சித்தார்.

    • புதிய அரசில் குழப்பம் நிலவி வருகிறது.
    • மூத்த அதிகாரிகளே என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்.

    மும்பை :

    மகாராஷ்டிரா முதல்-மந்திரியாக ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரியாக தேவேந்திர பட்னாவிஸ் கடந்த ஜூன் 30-ந் தேதி பதவி ஏற்றனர். எனினும் பதவி ஏற்று ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்படவில்லை. இதை எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்தநிலையில் ஷிண்டே, பட்னாவிஸ் அரசை 'ஏக் துஜே கேலியே' அரசு என பா.ஜனதா எம்.பி. ஒருவரே வர்ணித்ததாக தேசியவாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், " இன்று பா.ஜனதா எம்.பி. ஒருவருடன் பேசினேன். அப்போது அவர் ஷிண்டே - பட்னாவிஸ் அரசை, 'ஏக் துஜே கேலியே' அரசு என கூறினார். இதுபோல நான் ஒருபோதும் நினைத்து பார்க்கவில்லை. கடந்த மகாவிகாஸ் ஆட்சியில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் பொறுப்பு மந்திரிகள் இருந்தனர். அவர்கள் மூலமாக நாங்கள் அந்த பகுதி மக்கள் பிரச்சினைகளை தீர்த்து வந்தோம். தற்போது புதிய அரசில் குழப்பம் நிலவி வருகிறது. மூத்த அதிகாரிகளே என்ன செய்வது என்று தெரியாமல் உள்ளனர்" என்றார்.

    'ஏக் துஜே கேலியே' இந்தியில் மெகாஹிட்டான காதல் படத்தின் பெயர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×